Thursday, May 21, 2015

கவியும் கதை சொல்லும்

கவியும் கதை சொல்லும் --கயல்விழி
சிட்டாய் பறந்தவள்
சிறகுடைக்கப் பட்டேனே .
சிறைக்குள் அடைப்பட்ட
சில்வண்டாய் ஆனேனே .

வலி என்னை வாட்டுகையில்
வழி தெரியாது தவிக்கின்றேன் .
உயிரான கவி வழியே
உண்மை நிலை உரைக்கின்றேன் .

சொந்தங்கள் சூழ உண்டு
துணையாக எவரும் இல்லை
என் துன்பம் பகிர்திடவே
என்னவனும் அருகில் இல்லை .

தலைகோதி மாடிசாய்க்க
தாயவள் உலகில் இல்லை .
தரித்திரமாய் பிறந்ததினால்
தந்தையும் இங்கு இல்லை .

தனிமை என்னை கொல்லுதே ..
மரணித்திட சொல்லுதே ..
கண்ணீரின் வெப்பம் தாங்காது
தலையணையும் விம்முதே .

தற்கொலை உகந்தது அல்ல
தமிழுக்கு அது அழகும் அல்ல
என்னைத்தேற்றிக் கொள்கின்றேன்
இதனால் தான் இன்னும் வாழ்கின்றேன்....!!!!!!!!!

Wednesday, May 20, 2015

கற்பழிப்பிலும் லாபம் தேடும் காட்டு நரிகள்

கற்பழிப்பிலும்  லாபம் தேடும் காட்டு நரிகள் --கயல்
 தீவிற்குள் ஒரு தீவில்
தீபமாக எண்ணியவள் .
செடிதனில் அரும்பாகி
மலர்ந்திட விரும்பியவள் .

பள்ளி படிப்பு முடித்து விட்டு
பட்டப் படிப்பு முடித்திடனும்
புத்தகம் தூக்கிய பூவை இவள்
போட்டு வைத்த எண்ணம் இது .

புள்ளி மானாய் துள்ளித் திரிந்தாள்
துரத்துவது புலி என அறியாமல் .
பிடித்தது புலிக்கூட்டம் ஒன்று
புசித்தது பூவையை கசக்கி .

பெண்மையோடு பொன் உயிரும்
போனபின்பு
புலிக்கூட்டம் பதுங்கிக்கொண்டது
நீதியின் பின் .

பிள்ளையை இழந்த பெற்றவர்கள்
கண்ணீரில் குளித்து நிற்கையிலே
லாபம் தேடும் நரிக்கூட்டம்
கூருபோடுது கன்னியின் இறப்பை .

கற்பழித்த காமுகர்கள் கண்ணெதிரே
நின்றாலும்
அரசியல்வாதி கைகோர்த்தோர்
அறிந்திடார் அவர்களைத்தான் .

கருநாள் வெறும் கண்துடைப்பே
இது அரசியலின் கற்பழிப்பே
இறந்தவளுக்கு வழி விடுங்கள்
இனியேனும் அவளை வாழ விடுங்கள்..

Tuesday, May 19, 2015

பிடிக்கும் - பிடிக்காது

பிடிக்கும்   -  பிடிக்காது
ரசிக்க மாட்டேன் உன்னை -நீ
திமிர் பிடித்தவன்
பேச மாட்டேன் உன்னோடு -நீ
ஆணவக்காரன் .

காதலிக்க மாட்டேன் உன்னை - நீ
கர்வக்காரன் .
முத்தமிடவும் மாட்டேன் - நீ
முரடன் .

உன் பெயர் உச்சரிக்க மாட்டேன் - நீ
பொல்லாதவன் .
உன்னை நேர்நோக்க மாட்டேன்- நீ
நேசிக்க தெரியாதவன் ..

அட

நான் விரும்பியவை எல்லாம்
விரும்பாதவன் உன்னிடத்தில் .!

அடேய் திருட்டுப் பயலே
விட்டு விடு அனைத்தையும் இல்லையேல் .¿
விரும்பிடு என்னை மட்டும் .!!!!!""

(பெண். பிடிக்காது என்றால் பிடிக்கும் என்று அர்த்தம் )

Monday, May 18, 2015

கல்யாணக் கல்யாண கனவு

கல்யாணக்  கல்யாண  கனவு  -  கயல்விழி
கோபக்காரனாய் ஒருவன் வேண்டும்
கொஞ்சலும் தினம்தினம் வேண்டும்
ஆணவம் சற்று இருத்தல் வேண்டும்
அன்பிற்கு மட்டும் அடங்க வேண்டும்
அத்தை மாமன் உறவு அவன் தர வேண்டும்
அன்னை தந்தையாய் அவர்களே வேண்டும்.

***************************

நாத்தனார் சண்டைகள் சின்னதாய் வேண்டும்
அதில் நான் தினம்
தோல்வியுற வேண்டும்
மன்னிப்பு கேட்டு நான் மண்டாட வேண்டும்
அன்போடு மன்னிப்பையும் அவர்கள் அள்ளித்தர வேண்டும்

***********************
ஊரார் உச்சிக்கொட்டி தினம்
பார்க்க வேண்டும்.
கண்பட்டு விடும் என்று -அத்தை
தினம் சுத்திப்போட வேண்டும்
மருமகள் மகளாக மாறவேண்டும் வேண்டும்.
என் மணவாழ்க்கை மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.

**************************
கொஞ்சிட குழந்தைகள் மூன்று வேண்டும்- அதில்
தலைமகனாய் என்னவனே இருக்க வேண்டும்
குடிசைவீடு கோயிலாய் மாறவேண்டும்
குலமகளாய் நான் அங்கு வாழ வேண்டும் .

Saturday, May 16, 2015

ஒன்றுபடுவோம் உரிமைவெல்வோம்

ஒன்றுபடுவோம் உரிமைவெல்வோம் - கயல்விழி
குண்டுமழையிலும்
குருதி வெள்ளத்திலும்
ஈழத்தமிழர் அழிகையில்
தலைகவிழ்ந்து நின்றான் கோழைத்தமிழன்...

€€€€€€€€€€€€€€€€€

ஐக்கிய நாடுகள் அர்த்தமற்று
போகையில்
அயல்நாடுகள் ஆஹாஹா
ரசித்தன..

€€€€€€€€€€€€€€€€

அன்னையினதும் தங்கையினதும்
அம்மன அணிவகுப்பை
கண்ணெதிரே கண்ட அன்றைய
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஈழத்தமிழனின் துடிப்பை
ஊமையாகி வேடிக்கை பார்த்தது உலகம் .
€€€€€€€€€€€€€€€€€€€€€€ ்

இறந்த உடல்களைகூட இச்சைக்கொண்டு எச்சில் படுத்தியது
காமவெறி பிடித்த கழுகுகள் .

€€€€€€€£€€€€€€€€€€€€€€

கட்டபொம்மனை போல்
பட்டுத்தலைவனையும்
காட்டிக் கொடுத்த எட்டப்பன்கள்
கூடிக்களித்தனர் ஈழ அழிவினை .
€€€€€€€€€€€€€€€€€€€€€

இழப்பினை தாங்கி
எமனோடு போராடி
மிஞ்சிய உயிர்கள் இன்று
நெஞ்சிலே நெருப்பினைக்கொண்டு
வாழுது பலதுயர்கள் கண்டு .
€€€€€€€€€€€€€€€€€€€€€

அவருக்காக
கண்ணீர் அஞ்சலிகள் வேண்டாம்
கறுப்புக்கொடிகளும் வேண்டாம்
மறக்குலந்தோர் நாங்கள் .
மறைந்து திரிதலும் வேண்டாம்

€€€€€€€€€€€€€€€€€€€€€€€€

தாய்மானம் காக்க வேண்டும்
தரணி
தமிழனை போற்றிட வேண்டும்
உரிமைகள் வென்றிட வேண்டும்
முதலில் நாம்
ஒன்றுபட வேண்டும்..
€€€€€€€€€€€€€€€€€€€.

Saturday, May 9, 2015

அன்னையே உனக்கு -அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையே உனக்கு -அன்னையர் தின வாழ்த்துக்கள்
கருவறையில் இடம்கொடுத்து
மார்போடு சேர்த்தணைத்து ..
கண்ணே மணியே என்று
தாலாட்டில் உறங்க வைத்து ..
உதிரத்தை உருக்கி தினம்
உணவாய் தந்த பாலும்
விழிநீராய் வழியுதம்மா
வேதனையை தூண்டுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பெற்றவளே உன்னை போற்ற
பூமிதனில் ஓர் நாளாம்.!
புத்திக்கெட்ட மனித இனம்
பொருந்திக் கொண்டது இந்நாளை

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥..

உயிர் கொடுத்த உத்தமியே
உனக்கொரு நாள் போதாது
உலகம்கூட உன்அன்பிற்கு
ஈடு இணை ஆகாது ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

கண்மணியே என் அருகில் -நீ இல்லை என்றபோதும்
இறையடியில் எப்போதும் இன்பமாய் வாழ்ந்திடனும் ..
இறையருளும் என் நினைவும்
என்றென்றும் உன்னோடு !!!!!!!!!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

(வாரியணைக்க நீ இல்லை
இருப்பினும் வாழ்த்துரைத்தேன்
நானுனக்கு ......!!!

உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த "அன்னையர் தின வாழ்த்துக்கள் "

வணங்குகின்றோம் அன்னையரே வாழ்த்திடுங்கள் எங்களை )

Tuesday, May 5, 2015

நீ வேண்டும் என் உயிரே

நீ வேண்டும் என்  உயிரே
முரணும் முறைப்புமாய்
நீயும்
கெஞ்சலும் கொஞ்சலுமாய்
நானும்
முதல் முறை எனக்குள்
இயற்கை அனர்த்தம்
இதயத்தின் ஓரத்தில் .....

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

நீ சிரித்துப் பேசிய தருணத்தில்
என்னை
மறந்து போனேனா ..?
இல்லை
அன்பெனும் வேல்தொடுத்து
சிறை பிடித்து போனாயா
..???

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

ஆளில்லா வனத்தினில்
விரல்பிடித்து நடந்தபின்
இதுவரை போதும் என்று எதை நம்பி விட்டுச் சென்றாயோ ...????

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

காரிருள் சூழ்ந்த கானகத்தில்
கண்ணீரோடு தவிக்கின்றேன்
கண்ணா என் கரம்கோர்த்து
கரை சேர்க்க வந்துவிடு ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தேவதையாய் நான் இல்லை
உன்மேல் திடமான காதல் உண்டு
தாரமாகி உனக்கே நான் தாயுமாகும் திறனும் உண்டு...
விலகாதே என் உயிரே
என்றும் வேண்டும் நீ எனக்கு ..!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥