Wednesday, June 24, 2015

நெருங்கி வா முத்தமிடாதே

நெருங்கி வா முத்தமிடாதே
நேர்முகம் நோக்கி
நினைவினை இழந்த
அழகான இருவரின்
அகோர முத்தம் அது.
முத்தத்தின் சத்தத்தில் மூச்சிரையாகினர் பலர் .
முச்சி நின்றே போனது சிலருக்கு .

அலைபேசி அலறல்கள்
அவசர ஊர்திகள் .
குருதி குளித்த பாதை
அங்காங்கே மாமிச சிதறல்கள் .

உறவை இழந்தவரும்
உடல் உறுப்புகளை இழந்தவரும்
ஒப்பாரி சத்தங்களால்
துடிதுடித்த கணம்தான் அது.

ஓய்வின்றி உழைத்ததால் ஒருவருக்கு
உறக்கத்தின் உச்சமாம் .
வயிறு முட்ட குடித்ததால்
மற்றவருக்கு
போதையின் கிரக்கமாம்.

காக்கிச்சட்டை போட்டவர்கள்
விரட்டிக்கொண்டு இருந்தார்கள்
விருந்துண்ண வந்த காகங்களையும்
வேடிக்கை பார்க்க வந்த மனிதர்களையும் .

மறுநாள் பத்திரிகை செய்தி மட்டும்
"இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஐம்பதிற்கு மேற்பட்டோர் பலி "
என் பார்வையில் முத்தம்
மோதலாகியது ...!!

இவன் என் தம்பியாவான்

இவன் என் தம்பியாவான்
மடியில் முகம் புதைத்த
மயக்கத்தில்
ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.

இடை இடையே கரங்கள்
அவள் இடையை வருடிக்கொண்டிருந்தது .

இடம் கிடைக்கும் சமயத்தில்
முத்தம் எனும் பெயரில்
முகத்தை எச்சில் படுத்தினான் .

எட்டிப் போ என்றால் அவள் பின்
சுற்றி சுற்றியே நின்றான்
சூடுதேவை என்பதற்காய் .

ஆசையோ ஆத்திரமோ
இரண்டில் எப்படி அவன் அணைத்தாலும் நகம்பட்டு
ரணமாகும் தேகம் தான் .

யார் இவன் என் இப்படி .?

எங்கிருந்து வந்தானோ நானறியேன்
எனக்குள் எப்படி நுழைந்தானோ நானறியேன் .
மிச்ச உணவை தான் வைத்தேன்
வாலாட்டி வந்துவிட்டான் .

நாய் என்று நான் உரையேன்
அவனெனக்கு தம்பி ஆவான் .
நன்றிகெட்ட மனிதனைவிட
இவன் எனக்கு மேன்மையாவான் .

Tuesday, June 23, 2015

உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான்

உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான்
ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரி
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .

பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?

பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? - இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?

சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?

அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?

ஏழைகள் மேல் இரக்கம்கொண்டு
என் இருப்பிடம் அழைத்தேனா .?
என்னிடம் இருப்பதை கொடுத்துவிட்டு
அவர்கள் போல் வாழ்ந்தேனா .?


எதுவுமே செய்ததில்லை இதுவரை இந்த கன்னி .
இதைகூட கிறுக்கிவிட்டேன்
கவிதை என்று எண்ணி .!!!!

Saturday, June 20, 2015

இதுவும் ஓர் இதமான காதல்

இதுவும் ஓர் இதமான காதல்
அரவம் நிறைந்த வனமொன்றில்
தனிமை சூழ்ந்த பொழுதொன்று
பதை பதைத்து மிரளுகையில்
பரிதாபமாய் பார்த்தது கருடன் ஒன்று .

பாசத்தோடு அருகில் வந்து
பேசிநின்றது ஏக்கத்தோடு.
துணையாய் உனக்கு நான் வந்து
துன்பம் தீர்க்கும் நாள் இன்று
விலையாய் வேண்டும் நீ என்று
வேண்டிக்கொண்டது காதல்தனை .

உயிரா உள்ளமா என்றபோது
உயிரே என்றது உள்மனது
காதல் கிடைத்த கருடனது
காவலனாய் மாறிய தருணமது .
கருட அரவ மோதலிலே வெற்றி என்றும் கருடருக்கே .

காதலி கைபிடித்து காதலனாய்
கருடனவன் நாடுவந்தான் .
கன்னிக்கு கணவன்
கருடனா....?
காறி உமிழ்ந்தனர் கண்ணில்பட்டோர்
குரங்கு கையில் பூமாலையாம்
குசுகுசுத்தார் இன்னும் சிலர் .

கருடன் தன் நிலை உணர்ந்து
இன்னுயிர் துறக்க முடிவெடுத்தான்
அரவம் நிறைந்த வனம் சென்று
அதற்கே உயிரை தானம் செய்தான் .

கண்ணாளா எங்கே சென்றாய்
கதறிவிட்டாள்
கண்ணீர் வழிந்திட துடித்துவிட்டாள்
கண்டது கனவென அறிந்தவுடன்
கன்னி தனக்குள் சிரித்துக்கொண்டாள் .!!

Thursday, June 11, 2015

எனக்குள்ளும் அந்த ஒன்று உருவானது

 

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம்
இரு விழிகளின் வழியே
அந்த ஒன்று
இயத்தை திறந்த நொடி .

தரணியை அளக்க நினைத்தவள்
தன்நிலை மறந்தவள் ஆனேன்
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள்
பரிகாசிக்கப்பட்டு போனேன் .

நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள்
நிலம்பார்த்து நடக்கலானேன்
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை
நானே கேட்கலானேன் .

கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார்
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன்
கடுவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.

இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றேன்.
இலகுவாக்கும் உன்னை என்றார்
ஏளனமாய் நகைத்துச் சென்றேன் .

இன்று என்ன ஆனது !
எல்லாமே ஆனது ..
எனக்குள் காதல் உருவாக ..
என் ஆணவம்மெதுவாய் அழிந்திடலானது ...!!!!