Tuesday, August 25, 2015

உண்மையான அழகு


தினம் ஒரு ஆடையும்
வித வித உணவும்
வெட்டி பந்தாவிற்கு அலங்காரங்களும்
என்று அலையும்
பணக்காரர்களை விட
அழுக்கான ஆடையுடன்
அன்றாடம் அரைவயிறு உணவிற்காய்
கரம் ஏந்தும் யாசகர்கள்
அழகாய் தெரிகின்றார்கள்
அன்பை தேடும்
என் விழிகளுக்கு ..

Thursday, August 6, 2015

அழிவை நாடும் பெண்களும் சிதைந்து போகும் புனிதமும்

அழிவை நாடும் பெண்களும் சிதைந்து போகும் புனிதமும் --கயல்விழி
தாய் தந்தை அணைப்பிற்கு
கண்ணீரில் விடைகொடுத்து .
அண்ணன் தம்பி நண்பர்க்கும்
தவிப்போடு பயணம் சொல்லி .

தாரமாய் வந்தவளை பார்போற்ற வேண்டுமென்று .
துணிகின்றான் தொழில் தேடி
தொலைதூரம் செல்வதற்கு .

கடல் கடந்து சென்றவன்
கண்ணீரில் குளிக்கின்றான் .
பாலைவன வெயில் தனில்
புழுவாக துடிக்கின்றான்.

உதிரம் உருகி வேர்வையாக
பணத்திற்காய் உழைக்கின்றான் .
துனையாளின் நினைப்போடு
காலத்தை ஜெயிக்கின்றான் .

கட்டு கட்டாய் காசு வர கணவனை அவள் மறக்கின்றாள் .
காமமோகம் தலைக்கேற
களியாட்டம் நடத்துறாள்

கட்டியவன் நம்பிக்கையை
பொடி பொடியாய் உடைக்கின்றாள்
பெண்மையின் புனிதத்தை
குழிதோண்டி புதைக்கின்றாள்.

கனவோடு காதலையும்
சுமந்து நாடு வருகின்றான்
தன்
மனையாளின் நிலைகண்டு
உயிரோடு மரிக்கிறான் .

கணவன் இன்றி கர்பமாகும்
மனைவியரே கேளுங்கள் .
வேலியாய் தாலி உண்டு பயிர்
உம்மானம் காத்திடுங்கள் ..!!


(இது இன்று பல இடங்களில் நடப்பவை .கண்ணால் கண்டதும் தான்.தவறாக நிகைக்க வேண்டாம் .இவை ஒரு சில பெண்களுக்கு மட்டும் )

என்னமோ சொல்ல தோணுது


மதுவிலக்கு வேண்டும்
மதுபோத்தல் .!
மார்தட்டி நிக்குது
வெரும்போத்தல்.!

புரட்சி என்பது
பொய் பீத்தல் .!
புரிந்து கொள்ளாதோர்
எம் மக்கள் .!

மரணத்தை விலைபேசுது
மதுவாசம் .
மௌனித்து நிற்பது
வெறும் வேஷம் .!

Monday, August 3, 2015

கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன்

கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் --கயல்விழி
அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..
உயிர் குடிக்கும் கேலிகள் .

அடடடா ...
சோகம் ஏன் உங்களிடம்
சோர்வே இல்லை என் மனதிடம் .

கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க
இருள் வேண்டும் என்றால்
கார்மேகம் வந்தால் தான்
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்
கவலை கொள்ளவேண்டும் .

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கறுப்பாய் பிறந்ததற்கு .

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!

Sunday, August 2, 2015

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் -கயல்விழி
சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .

துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .

சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்

அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.

தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!


என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹாப்பி நண்பர்கள் டே வாழ்த்துக்கள் .

அன்புடன் என்றும் இவள் .
"உங்கள் கயல் "

Saturday, August 1, 2015

காதலித்து தோற்றுப்பார்

காதலித்து தோற்றுப்பார்--கயல்விழி
கடல் அலை நெருப்பாகும் .
கடலை வெறுப்பாகும் .
கண்ணீர் மழையாகும்
கைக்குட்டை துணையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

பீர் தேனாகும்
அதை விற்பவன் கடவுளாவான் .
சிகரட் தோழனாகும்
தோழன் எதிரியாவான் .

காதலித்து தோற்றுப்பார்..!

சி ரிப்பு எட்டாகனியாகும்.
சினம் தினம்வந்து
ஒட்டிக்கொள்ளும் .
தாயின் கண்ணீர் எரிச்சலாகும் .
தம்பியின் குறும்பு கொடுமையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

தொலைபேசி சோர்ந்து போகும்
அதை நீ
பார்த்து பார்த்தே நொந்து போவாய் .
பொழுது புலர்ந்த பின்பும்
உன்னை மட்டும் இருள் சூழும் .

காதலித்து தோற்றுப்பார்..!

கண்டி க்ராஷோடு
நேசம் கொள்வாய் .
விண்ணப்பம் அனுப்பியே
நண்பர்களை கொல்வாய்.!

காதலித்து தோற்றுப்பார் .!

தந்தை
அரக்கனாய் தெரிவார் .
தோழிகள் துரோகியாய்
தெரிவார்கள் .

காதலித்து தோற்றுப்பார் .!

பணம் நீ கண்ட பேய் என்பாய் .
காதலே பொய் என்பாய்.
காவி மட்டும் தரிக்காமல்
இன்பங்களை நீ துறப்பாய்.

காதலித்து தோற்றுப்பார்.!

வீடு நரகமாகும் .
வெறுமை நிறைந்த
மரநிழல் சுகமாகும் .
படிப்பில் பட்டங்கள் பெற்றிருந்தாலும்
மௌனம் மட்டுமே பேசும்
மொழியாகும் .!!!!!"