எழுத்துக்களின்
இடையே
மரணிக்க சொல்லி
புதைக்கின்றேன்
மனதை வதைக்கும்
வலிகளின்
வடுக்களை .
நிந்திக்க வேண்டாம்
நினைவுகளே
நித்தம் துடிக்கின்றேன்
உங்களால் ..!!
Tuesday, August 25, 2015
உண்மையான அழகு
தினம் ஒரு ஆடையும்
வித வித உணவும்
வெட்டி பந்தாவிற்கு அலங்காரங்களும்
என்று அலையும்
பணக்காரர்களை விட
அழுக்கான ஆடையுடன்
அன்றாடம் அரைவயிறு உணவிற்காய்
கரம் ஏந்தும் யாசகர்கள்
அழகாய் தெரிகின்றார்கள்
அன்பை தேடும்
என் விழிகளுக்கு ..
No comments:
Post a Comment