எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Wednesday, April 13, 2016
தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016
துர்முகி தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டினை கொண்டாடும் அனைத்து தமிழ், உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
HappY TamiL, Singhala NEW YEAR
Monday, April 11, 2016
நிழல்
நீயும் நானும்
ஒரே ஜாதி தான்
எட்டி உதைத்தாலும்
விட்டுப்போவதில்லை யாரையும்
ஒரே ஜாதி தான்
எட்டி உதைத்தாலும்
விட்டுப்போவதில்லை யாரையும்
கெட்டவரோ நல்லவரோ
எப்போதும்
இணைந்தே இருக்கிறாய்
ஏனோ
அவர்கள் தான் கண்டுகொள்வதில்லை உன்னை.
எப்போதும்
இணைந்தே இருக்கிறாய்
ஏனோ
அவர்கள் தான் கண்டுகொள்வதில்லை உன்னை.
என்னைப்போல்
உனக்கும் இருளைக் கண்டால்
பயமோ
மறைந்துவிடுகிறாய் மண்ணோடு.
உனக்கும் இருளைக் கண்டால்
பயமோ
மறைந்துவிடுகிறாய் மண்ணோடு.
நிஜமாய் தான் நீ
இருக்கிறாய்
நிறத்தில் கறுப்பாகி விட்டாயே
அதனால் தான்
பொய்யோடு ஒப்பிட்டும்
விடுகிறார்கள்.
இருக்கிறாய்
நிறத்தில் கறுப்பாகி விட்டாயே
அதனால் தான்
பொய்யோடு ஒப்பிட்டும்
விடுகிறார்கள்.
உன்னை பலருக்கு பிடிக்காத
போதும்
என்னைப் போல் சிலருக்கு
பிடித்து விடுகிறது
காரணம்
எம்மை பிரிவதே இல்லை நீ.
போதும்
என்னைப் போல் சிலருக்கு
பிடித்து விடுகிறது
காரணம்
எம்மை பிரிவதே இல்லை நீ.
உன்னை நினைக்கப்போவதே இல்லை...!!!!
வெறுக்க மட்டும் கற்றுக்கொள்கிறேன்
எவரையும் இனி நேசிக்கப் போவதில்லை .
எவரையும் இனி நேசிக்கப் போவதில்லை .
உங்களையும் தான் பட்டாம்பூச்சிகளே
இனி
என்னை வட்டமிடுவதை
தவிர்த்திடுங்கள்
இனி
என்னை வட்டமிடுவதை
தவிர்த்திடுங்கள்
எங்கோ சென்று
வாழுங்கள்
காதல் பறவைகளே
இனி
என் முன் கொஞ்சி விளையாட
வேண்டாம்.
வாழுங்கள்
காதல் பறவைகளே
இனி
என் முன் கொஞ்சி விளையாட
வேண்டாம்.
இன்றே கருகி போய்விடுங்கள்
இல்லையேல்
களவு போய் விடுங்கள் என் ரோஜாச் செடிகளே
இனி இவள் உங்களையும்
கவனிக்கப் போவதில்லை.
இல்லையேல்
களவு போய் விடுங்கள் என் ரோஜாச் செடிகளே
இனி இவள் உங்களையும்
கவனிக்கப் போவதில்லை.
என் வருகைக்காய் காத்திருக்க
வேண்டாம் ஜக்கி
தெருவிலும் உனக்கான
எலும்பு துண்டுகள் கிடைக்கலாம்.
வேண்டாம் ஜக்கி
தெருவிலும் உனக்கான
எலும்பு துண்டுகள் கிடைக்கலாம்.
போ பெத்திமா
உன் உறவுகளோடு
இணைந்து வானில் பற
இனி இவள் உனக்கும்
தேவையற்றவள்.
உன் உறவுகளோடு
இணைந்து வானில் பற
இனி இவள் உனக்கும்
தேவையற்றவள்.
என்னை
எதிர்பார்க்க வேண்டாம்
மேரி பாட்டி
இனி இவள் ஸ்டெல்லாவாய்
மாறப்போவதில்லை.
எதிர்பார்க்க வேண்டாம்
மேரி பாட்டி
இனி இவள் ஸ்டெல்லாவாய்
மாறப்போவதில்லை.
மன்னித்து விடுங்கள்
என் மரத்தடி உறவுகளே
இனி இவள் உங்களையும் நேசிக்கப்போவதில்லை.
என் மரத்தடி உறவுகளே
இனி இவள் உங்களையும் நேசிக்கப்போவதில்லை.
இதுவரை உறவாய் இருந்த இவைகளையே
நேசிக்காத போது இடையில் வந்த உன்னை மட்டும் என்ன
போடா போ
நேசிக்காத போது இடையில் வந்த உன்னை மட்டும் என்ன
போடா போ
இனி
உன்னை நினைக்கப்போவதே இல்லை...!!!!
Thursday, April 7, 2016
தாயுமானவன்
தாயாய் சுமக்கும்
தாரமானவளே
தா
எனக்கும் தாயாகும் வரம்
என்கிறான்
தாரமானவளே
தா
எனக்கும் தாயாகும் வரம்
என்கிறான்
ஆணிடம் தாய்மைக்கான
சாத்தியம் இல்லை
என்றேன் உறுதியாக
சாத்தியம் இல்லை
என்றேன் உறுதியாக
இருக்கிறது
பெண்ணே
அந்த மூன்று நாட்கள்
பெண்ணே
அந்த மூன்று நாட்கள்
அமைதியாகிறேன்
ம்ம்ம்
பெண்மையின் வலி புரியும்
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று
நாட்கள் இருக்கும்..!!!
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று
நாட்கள் இருக்கும்..!!!
Wednesday, April 6, 2016
ஊடலும் கூடலும்
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அணைத்துக்கொள்வதை
தவிர
எதுவும் நினைவில் இருக்காது
எனக்கு..!
Tuesday, April 5, 2016
காதல் பித்து
உண்மையா இருக்கணும்
உனக்கு மட்டுமே இருக்கணும்
உறுதியாய் சொல்கிறான்
உணர்ந்து கொள்ள
முடியாதவனாய்
என் உள் உணர்வுகளை .
உனக்கு மட்டுமே இருக்கணும்
உறுதியாய் சொல்கிறான்
உணர்ந்து கொள்ள
முடியாதவனாய்
என் உள் உணர்வுகளை .
இதயத்தின் லட்டப்
சத்தம்
இரவின் அமைதியை கிழித்து
இமையத்தையும் தாண்டி
பேசிக்கொண்டே இருக்கிறான்.
ஒலித்துகொண்டிருக்க அவன் மட்டும்சத்தம்
இரவின் அமைதியை கிழித்து
இமையத்தையும் தாண்டி
பேசிக்கொண்டே இருக்கிறான்.
இலக்கணம் அறிந்திருக்கிறாயா
நீ
இலக்கியத்தில் போல
கள்ளத்தனமாய் காதல் செய்வோம்
பின்
அகிலமும் அறியச் செய்வோம்
முத்தம்கொடு
முத்திவிட்டது உன்மேலான
காதல் பித்து
நீ
இலக்கியத்தில் போல
கள்ளத்தனமாய் காதல் செய்வோம்
பின்
அகிலமும் அறியச் செய்வோம்
முத்தம்கொடு
முத்திவிட்டது உன்மேலான
காதல் பித்து
ஆணின் அத்தனை ஆணவமும்
அழிந்தது உன் அன்பின்
முன்னால்
முத்தம் கொடு
முக்தி பெற வேண்டும் உன்னை
நித்தித்தவையில் இருந்து.
முன்னால்
முத்தம் கொடு
முக்தி பெற வேண்டும் உன்னை
நித்தித்தவையில் இருந்து.
ஏதேதோ
உலறிக்கொண்டிருக்கும்
அவன் இதழ்களை கவனிக்காதவளாய்
உலறிக்கொண்டிருக்கும்
அவன் இதழ்களை கவனிக்காதவளாய்
இதோ
இன்னும்
இறக்கை இன்றி பறந்துகொண்டிருக்கின்றேன்
வானில்
அவன்
இதயத்தில் இருப்பிடம்
கிடைத்த மகிழ்ச்சியில்...!!!!
இன்னும்
இறக்கை இன்றி பறந்துகொண்டிருக்கின்றேன்
வானில்
அவன்
இதயத்தில் இருப்பிடம்
கிடைத்த மகிழ்ச்சியில்...!!!!
Sunday, April 3, 2016
ஒருவேளைஅப்படி நடந்திருந்தால்
ஒரு வேளை அப்படி
நடந்திருந்தால்
என் வீட்டு பெத்திமா
அதன் பாஷையில் கீக் கீ
என்று அழுதிருக்கும்
நடந்திருந்தால்
என் வீட்டு பெத்திமா
அதன் பாஷையில் கீக் கீ
என்று அழுதிருக்கும்
என் லவ்பேர்ட்ஸ்
ஏதோ ஒரு ராகம்
நிச்சயம் சோகமாய்
இசைத்திருக்கும் .
ஏதோ ஒரு ராகம்
நிச்சயம் சோகமாய்
இசைத்திருக்கும் .
நான் வளர்த்த
ரோஜா
இன்று
நிச்சயம் மலரொன்றை
பிரசவிக்க தயாராகி இருக்கும்
எனக்காக.
ரோஜா
இன்று
நிச்சயம் மலரொன்றை
பிரசவிக்க தயாராகி இருக்கும்
எனக்காக.
இது வரை
சிரித்துக்கொண்டிருந்த
என்
மரத்தின் கிளைகள்
ஸ்தம்பித்து போயிருக்கும்
ஆணிவேர்
அறுந்துவிட்டதால்.
சிரித்துக்கொண்டிருந்த
என்
மரத்தின் கிளைகள்
ஸ்தம்பித்து போயிருக்கும்
ஆணிவேர்
அறுந்துவிட்டதால்.
மாதம் ஒரு முறையெனும்
ஸ்டெல்லாவை காணும்
முதியோர் இல்லத்து
மேரி பாட்டி
பிராத்தித்துக்கொண்டிருப்பாள்
கர்த்தரே கயலை மீண்டும் தாவென.
ஸ்டெல்லாவை காணும்
முதியோர் இல்லத்து
மேரி பாட்டி
பிராத்தித்துக்கொண்டிருப்பாள்
கர்த்தரே கயலை மீண்டும் தாவென.
ம்ம்ம்
அப்பிடி எதுவும் தான்
நடக்கவில்லையே
அப்பிடி எதுவும் தான்
நடக்கவில்லையே
இப்போது
ஏமாந்து போன எமன்
என்னை சபித்துகொண்டிருப்பான்
இன்றும் என்னிடம்
இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாள்
இவள் என்று.!!!!
ஏமாந்து போன எமன்
என்னை சபித்துகொண்டிருப்பான்
இன்றும் என்னிடம்
இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாள்
இவள் என்று.!!!!
Saturday, April 2, 2016
காதல் இப்படியும் இருக்கலாம்
விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க
நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்
நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல
திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட
தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள
அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்
அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.
குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
நான்.
Wednesday, March 30, 2016
இப்படியும் காதல் இருக்கும்
சிரிக்காதே
சுத்தமா பிடிக்கல
உதட்டை பிதுக்காதே
உனக்கு
பொருந்தவே இல்லை
சிவப்பு சாரி கட்டாத
காளி மாதிரி
இருக்க
வெள்ளை சுடிதார் வேணாம்
கன்பார்ம்
மோஹினி தான்
மாடர்ன் டிரஸ்
உனக்கு செட் ஆகாது
கிராமத்து டிரஸ்
சிச்சீ
செட்டே ஆகாது
ஓவரா பேசாத
கேட்க சகிக்கல
முத்தம் கேக்காத
வாமிட் வருது
கோவப்படாத
கேவலமா இருக்கு
முரைக்காத
சிரிக்க முடியல
லூஸ் கேர் விடாத
பிச்சக்காரி மாதிரி
இருக்கிற
கண்ணாடிய பார்க்காத
பயந்திட போற.
போடா நாயே
நான் போறேன்
போடி நீ போ
நீ போன பின்
என் உடல் இந்த
இடத்தில்
நிச்சயம்
மண்ணோடு
மக்கிப்போய் விடும்.
உயிர் பிரிந்த பின் உடலுக்கென்ன
வேலை..!
எனக்குள் பட்டாம்பூச்சி
மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?
இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது
ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது
அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது
நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை
பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!
Monday, March 28, 2016
நெற்றி முத்தம்
ஏதேதோ குழப்பங்கள்
என்னுள்
ம்ம்ம்ம்ம்ம்
இருக்கட்டும் அதற்கென்ன
கொடுத்துவிடு
அந்த நெற்றி முத்தத்தை
தெளிவு பெறட்டும்
மனது....!
என்னுள்
ம்ம்ம்ம்ம்ம்
இருக்கட்டும் அதற்கென்ன
கொடுத்துவிடு
அந்த நெற்றி முத்தத்தை
தெளிவு பெறட்டும்
மனது....!
Sunday, March 27, 2016
காதல் வானில்
பஞ்சபூதங்களும்
என்னைப் பார்த்தே
பொறாமை கொள்கிறது
ம்ம்ம்ம்
அவைகளின் எந்த
சேவையும்
அவசியமற்று போகிறது
அவன்
இதயமெனும் ஈரநிலத்தில்
உஷ்ணம் கலந்த
சுவாசக் காற்றை நிரப்பி
காதல் வானில்
பறக்கின்ற பொழுதில் ...!!
Thursday, March 24, 2016
தனிமையின் தவிப்புகள்
கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்
அன்னையின் மடியில்
ஆசையாய் பிள்ளைகள்
உறங்கும் போது
இதோ
இவள் மட்டும்
தனிமையில் தாய் மடி
தேடியபடி
உன் கரங்களில் கொடுக்கும்
ஒரு பிடி சோறு-உன்
இதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு
நெற்றி முத்தம்
இவைகளுக்காய்
ஏக்கங்களுடன் இதோ உன்
மகள்.
அறிவாயா தாயே
தனிமை கொடுமையென
தாயை இழந்தவள்
அனாதையென
என் வலியினை நீ அறிய
வாய்ப்பில்லை
கண்ணீரை துடைத்துவிட-உன்
கல் நெஞ்சில் ஈரமில்லை.
என் மைதீர்ந்த
எழுதுகோலிடம் கேள்
தனிமையின் ரணங்களை
தவிப்போடு சொல்லும்..
தாயவள் உனக்கான என்
துடிப்பை என்
தலையணையிடம் கேள்
விடியாத என் இரவின் வேதனைகளை
விழி நீரோடு சொல்லும்..!
மகள்கள் ஜாக்கிரதை (சில அப்பாக்களுக்கு)
காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.
வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.
சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.
என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்
அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்
ம்ம்ம்
இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்
மகளை பார்த்துக்கொள்ளுங்கள்
தங்களை போன்ற தந்தைகள்
இன்னும் உயிருடன்.
தலைகுனிந்த அவர் முன்
தலை நிமிர்ந்து நடந்தேன்.
Wednesday, March 23, 2016
அவன் யாராய் இருக்கக்கூடும்
இதோ
நான் நடந்து செல்லும்
இந்த
ஒற்றையடிப் பாதை
ஏளனம் செய்கிறது
பாதணிகள்
காலில் பாதி தான்
இருக்கின்றதாம்.
வாசனை திரவியங்கள்
அறியாத தேகம்
வியர்வை நாற்றத்தை
கலந்து
நாசினில் நுழைக்கிறதாம்
தென்றலும் தீண்டாமல்
செல்கிறது..
சாலையோர மரங்கள்
சபிக்கத் தொடங்கி விட்டது
இதோ என் நிழலை
அசுத்தபடுத்தவே வருகிறாள்
இவள் என
எஞ்சியுள்ள நாய்களும் முறைக்கின்றன
இன்றும் எச்சில் உணவுகளை
இவளே
எடுத்துக்கொள்வாளென..
ம்ம்ம்
நான் யார் இப்போது
பைத்தியகாரியா.?
அல்லது
பிச்சைக்காரியா..?
இரெண்டுக்கும் இடைப்பட்டவளா.?
என்னை எனக்கே தெரியாத
போது
இவளையும் நேசிக்கிறானாம்
ஒருவன்
சொல்லுங்கள்
அவன் யாராய் இருக்கக் கூடும்...?
Thursday, March 17, 2016
கவிதை கிறுக்கல்
வா
அந்த விண்மீன்
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
நீ என்னையும்
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும்
பொய்கள் உரைக்கலாம்.
உனக்கு பிடித்த
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி
அளிக்கலாம் .
வா வா இதோ இந்த இரவில்
ஏதேனும்
கிறுக்கலாம்
இது போல
கவிதை எனும் பெயரில்
காதல் தூது
காதல் தூதினை
கனவினில் விடுத்துச்
சென்றுவிட்டாய்
ம்ம்ம்
உறக்கமே விழிகளை
தழுவாத போது
பதிலென்ன நான்
உரைப்பேன்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மறுபடி
கனவில்
உன் வரவிற்காய் ....!
பொய்க்கால் குதிரை
கண்ணைகவரும்
ஆடைகளில் கலைஞர்
நாம் வருகின்றோம்
வேஷம் போட்டு உங்கள் முன்
நடன விருந்து
படைக்கின்றோம்...
வழி முழுதும் தோரணங்கள்
எம்
உடல் முழுதும் ரணத்தின்
வலிகள்.
கட்டைமேல் கால்வைத்து
எடுத்து அடி வைக்கையிலே
துடிக்கும் இதயம்
நின்று வரும் இதழ்கள்
மட்டும் புன்னகைக்கும்
அழிகின்ற மறவர் கலை
அழித்திடவே எண்ணம் இல்லை
எந்த செல்வம் இருந்தாலும்
இதன் வழியே
எம் மனம் செல்லும்..
விழாக்களில் எம்மை காண்பீர்
எம்
வேதனை யார் காண்பீர்.?
அரை வயிறு உணவு தான்
ஆனாலும்
துயர் இல்லை.
மரக்காலில் உயிரை வைத்து
மனதெல்லம் மறத்தமிழை வைத்து
எடுத்து சென்றோம் உலகறிய
ஏற்றுக்கொள்வீர்
இக்கலையை.....
Wednesday, March 16, 2016
சங்கீத ஸ்வரங்கள்

உனக்கும் எனக்குமான
இடைவெளியை
அதிகரிகின்றாயா.?
பணியென
என்னை
தனிமையாக்கி
விலகிச் செல்கிறாயா.?
போதும்
உன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்
சலித்துவிட்டதாம் என் திமிருக்கும்.
மொக்கை போடாதடி என்று
வார்த்தைகளை மெளனமாக்கிவிட்டு
முத்தத்தால் இதழ்களை
மொழி பெயர்ப்பு செய்பவனே
மகிழ்ச்சிகொள்
இவளின் மொக்கையோ
முணுமுணுப்போ
திட்டல்களோ கொஞ்சல்களோ
எதுவும் இல்லை
துயரம் இவள் அற்ற உலகில்
சுதந்திரமாய் சுற்றித்திரி.
ம்ம்ம்
எனக்கென்ன உன் நினைவுகளில்
துடிக்கும் இதயம் அதே
"சங்கித ஸ்வரங்கள் ஏழே
கணக்கா" வோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ..!
இடைவெளியை
அதிகரிகின்றாயா.?
பணியென
என்னை
தனிமையாக்கி
விலகிச் செல்கிறாயா.?
போதும்
உன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்
சலித்துவிட்டதாம் என் திமிருக்கும்.
மொக்கை போடாதடி என்று
வார்த்தைகளை மெளனமாக்கிவிட்டு
முத்தத்தால் இதழ்களை
மொழி பெயர்ப்பு செய்பவனே
மகிழ்ச்சிகொள்
இவளின் மொக்கையோ
முணுமுணுப்போ
திட்டல்களோ கொஞ்சல்களோ
எதுவும் இல்லை
துயரம் இவள் அற்ற உலகில்
சுதந்திரமாய் சுற்றித்திரி.
ம்ம்ம்
எனக்கென்ன உன் நினைவுகளில்
துடிக்கும் இதயம் அதே
"சங்கித ஸ்வரங்கள் ஏழே
கணக்கா" வோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ..!
Tuesday, March 15, 2016
சா-தீ
உள்ளத்தால் உன்னை
நேசிக்கிறேன்
உயிர் மூச்சாய்
சுவாசிக்கிறேன்
ஒரு முறை உண்மை சொல்
பெண்ணே
என்னை பிடிக்குமென்று...
என் பதிலுக்கு முன்
உன்
சாதியை சொல்லிவிடு
காத்துக்கொள்ள வேண்டும்
என்
தாலியை..!
சுமையில்லாப் பொழுதுகள்
சுமையில்லாப் பொழுதுகள்--கயல்விழி
பெற்ற பிள்ளைகள்
பாரினில் உயர்கையில்
தந்தையின் பூரிப்பு
சுமையில்லாப் பொழுதுகள்..
பொக்கிஷமான பெண்பிள்ளை
புகுந்த
வீடு செல்கையில்
அன்னையின் கண்ணீர்
சுமையில்லாப் பொழுதுகள்.
வறண்ட நிலத்தில்
பனித்துளி போல்
மலட்டு வயிற்றினில்
செயற்கை குழந்தை
சுமையில்லாப் பொழுதுகள்
முப்பத்தைந்து கடந்த
முதிர்கன்னி கழுத்தில்
குடியேறும்
மஞ்சளில் மாங்கல்யம்
சுமையில்லாப் பொழுதுகள்
கட்டிய கணவன்
கடலுக்குச் சென்று
உயிருடன் வருவதும்
சுமையில்லாப் பொழுதுகள்.
கர்ணனை போல்
நல்ல நண்பன் கிடைத்தால்
சாதல் வரை எல்லாமே
சுமையில்லாப் பொழுதுகள்.
Tuesday, March 8, 2016
காதல் வந்ததே எனக்குள் காதல் வந்ததே
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம்
இரு விழிகளின் வழியே
அந்த ஒன்று
இயத்தை திறந்த நொடி .
தரணியை அளக்க நினைத்தவள்
தன்நிலை மறந்தவள் ஆனேன்
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள்
பரிகாசிக்கப்பட்டு போனேன் .
நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள்
நிலம்பார்த்து நடக்கலானேன்
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை
நானே கேட்கலானேன் .
கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார்
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன்
கடவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.
இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றேன்.
இலகுவாக்கும் உன்னை என்றார்
ஏளனமாய் நகைத்துச் சென்றேன் .
இன்று
என்ன ஆனது !
எல்லாமே ஆனது ..
எனக்குள் காதல் உருவாக ..
என் ஆணவம்மெதுவாய் அழிந்திடலானது ...!!!!
Thursday, March 3, 2016
இதயம் பேசுகிறது
நிலா முற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "வெள்ளி முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை
அப்படி எதுவும் தவறு
செய்யவில்லை
அவள்
அனாதையாய்
பிறந்ததைத் தவிர..!
பெற்றவள் குப்பைத் தொட்டியிலிட்ட நொடியில் நினைத்திருக்கவில்லை
பெண்ணாய் பிறந்தது
குற்றமென..!
பிச்சைக்காரியின் பிள்ளையான போது
புரியவில்லை பூவைக்கு
பூப்பெய்தலும்
கொடுமை என்று..!
யாசிக்கும் கரங்களை
நெருடிய விரல்களின்
ஐந்து ரூபாய்
ஆபத்து என்றும் அறிந்திருக்க வில்லை
அபலை..!
இதோ எவனோ
மேய்ந்து முடிந்த அவள் தேகம் ஈக்கள் மொய்க்க தயாராகிக்கொண்டிருக்கின்றது .
அவளின் இதழ்கள்
இனி பேசபோவதில்லை
இதுவரை
அவளுக்காக துடித்துக்கொண்டிருந்த
நானே இறுதியாய் பேசிவிட்டேன்...!
இறுதித் துடிப்போடு
"இதயம்"...!!!
அப்படி எதுவும் தவறு
செய்யவில்லை
அவள்
அனாதையாய்
பிறந்ததைத் தவிர..!
பெற்றவள் குப்பைத் தொட்டியிலிட்ட நொடியில் நினைத்திருக்கவில்லை
பெண்ணாய் பிறந்தது
குற்றமென..!
பிச்சைக்காரியின் பிள்ளையான போது
புரியவில்லை பூவைக்கு
பூப்பெய்தலும்
கொடுமை என்று..!
யாசிக்கும் கரங்களை
நெருடிய விரல்களின்
ஐந்து ரூபாய்
ஆபத்து என்றும் அறிந்திருக்க வில்லை
அபலை..!
இதோ எவனோ
மேய்ந்து முடிந்த அவள் தேகம் ஈக்கள் மொய்க்க தயாராகிக்கொண்டிருக்கின்றது
அவளின் இதழ்கள்
இனி பேசபோவதில்லை
இதுவரை
அவளுக்காக துடித்துக்கொண்டிருந்த
நானே இறுதியாய் பேசிவிட்டேன்...!
இறுதித் துடிப்போடு
"இதயம்"...!!!
Monday, February 22, 2016
வெற்றி நிரப்பு
நிலா முற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "தங்க முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை
புலர்கின்ற பொழுது
இருள்சூழ்ந்த போதும்
மூடாதே விழியே
வெளிச்சத்தை தேடு.
தொலைதூர வானில்
ஏணியின் படிகள்
சோர்ந்திடாதே காலே
தோற்றுப்போவாய் நீயே..
ரணமாக்கும் முட்கள்
மலராக மாறும்
துயரென்ன மனமே
துணிவாய்
இனி ஜெயமே..
வடிகின்ற விழிநீர்
கடலாக மாறும்
கரைசேர்த்து உந்தன்
காயங்கள் ஆற்றும்..
விட்டில் பூச்சி நீயல்ல
விளக்கின் மடியில்
சாவதற்க்கு...
பெட்டிப்பாம்பும் நீயல்ல
அடிமைப்பட்டே
வாழ்வதற்க்கு..
முட்டி மோதி எழுந்துவிடு
முறையே
உலகை ஜெயித்திவிடு..
புகழை விண்வெளியிலும்
பரப்பு...
என்றும் வெற்றியை
மண்ணில் நீ
நிரப்பு.....
நன்றிகளுடன் கயல்.
புலர்கின்ற பொழுது
இருள்சூழ்ந்த போதும்
மூடாதே விழியே
வெளிச்சத்தை தேடு.
தொலைதூர வானில்
ஏணியின் படிகள்
சோர்ந்திடாதே காலே
தோற்றுப்போவாய் நீயே..
ரணமாக்கும் முட்கள்
மலராக மாறும்
துயரென்ன மனமே
துணிவாய்
இனி ஜெயமே..
வடிகின்ற விழிநீர்
கடலாக மாறும்
கரைசேர்த்து உந்தன்
காயங்கள் ஆற்றும்..
விட்டில் பூச்சி நீயல்ல
விளக்கின் மடியில்
சாவதற்க்கு...
பெட்டிப்பாம்பும் நீயல்ல
அடிமைப்பட்டே
வாழ்வதற்க்கு..
முட்டி மோதி எழுந்துவிடு
முறையே
உலகை ஜெயித்திவிடு..
புகழை விண்வெளியிலும்
பரப்பு...
என்றும் வெற்றியை
மண்ணில் நீ
நிரப்பு.....
நன்றிகளுடன் கயல்.
Subscribe to:
Posts (Atom)





















