Thursday, March 17, 2016

பொய்க்கால் குதிரை



கண்ணைகவரும்
ஆடைகளில் கலைஞர்
நாம் வருகின்றோம்
வேஷம் போட்டு உங்கள் முன்
நடன விருந்து
படைக்கின்றோம்...

வழி முழுதும் தோரணங்கள்
எம்
உடல் முழுதும் ரணத்தின்
வலிகள்.

கட்டைமேல் கால்வைத்து
எடுத்து அடி வைக்கையிலே
துடிக்கும் இதயம்
நின்று வரும் இதழ்கள்
மட்டும் புன்னகைக்கும்

அழிகின்ற மறவர் கலை
அழித்திடவே எண்ணம் இல்லை
எந்த செல்வம் இருந்தாலும்
இதன் வழியே
எம் மனம் செல்லும்..

விழாக்களில் எம்மை காண்பீர்
எம்
வேதனை யார் காண்பீர்.?
அரை வயிறு உணவு தான்
ஆனாலும்
துயர் இல்லை.

மரக்காலில் உயிரை வைத்து
மனதெல்லம் மறத்தமிழை வைத்து
எடுத்து சென்றோம் உலகறிய
ஏற்றுக்கொள்வீர்
இக்கலையை.....

1 comment: