Wednesday, March 30, 2016

இப்படியும் காதல் இருக்கும்



சிரிக்காதே
சுத்தமா பிடிக்கல
உதட்டை பிதுக்காதே
உனக்கு
பொருந்தவே இல்லை

சிவப்பு சாரி கட்டாத
காளி மாதிரி
இருக்க
வெள்ளை சுடிதார் வேணாம்
கன்பார்ம்
மோஹினி தான்
மாடர்ன் டிரஸ்
உனக்கு செட் ஆகாது

கிராமத்து டிரஸ்
சிச்சீ
செட்டே ஆகாது
ஓவரா பேசாத
கேட்க சகிக்கல
முத்தம் கேக்காத
வாமிட் வருது

கோவப்படாத
கேவலமா இருக்கு
முரைக்காத
சிரிக்க முடியல

லூஸ் கேர் விடாத
பிச்சக்காரி மாதிரி
இருக்கிற
கண்ணாடிய பார்க்காத
பயந்திட போற.

போடா நாயே

நான் போறேன்

போடி நீ போ
நீ போன பின்
என் உடல் இந்த
இடத்தில்
நிச்சயம்
மண்ணோடு
மக்கிப்போய் விடும்.

உயிர் பிரிந்த பின் உடலுக்கென்ன
வேலை..!

எனக்குள் பட்டாம்பூச்சி


மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!

Monday, March 28, 2016

நெற்றி முத்தம்


 


ஏதேதோ குழப்பங்கள்
என்னுள்
ம்ம்ம்ம்ம்ம்
இருக்கட்டும் அதற்கென்ன
கொடுத்துவிடு
அந்த நெற்றி முத்தத்தை
தெளிவு பெறட்டும்
மனது....!

Sunday, March 27, 2016

காதல் வானில்


பஞ்சபூதங்களும்
என்னைப் பார்த்தே
பொறாமை கொள்கிறது
ம்ம்ம்ம்
அவைகளின் எந்த 
சேவையும்
அவசியமற்று போகிறது
அவன் 
இதயமெனும் ஈரநிலத்தில்
உஷ்ணம் கலந்த 
சுவாசக் காற்றை நிரப்பி
காதல் வானில்
பறக்கின்ற பொழுதில் ...!!

Thursday, March 24, 2016

தனிமையின் தவிப்புகள்


கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்
அன்னையின் மடியில்
ஆசையாய் பிள்ளைகள்
உறங்கும் போது
இதோ
இவள் மட்டும்
தனிமையில் தாய் மடி
தேடியபடி

உன் கரங்களில் கொடுக்கும்
ஒரு பிடி சோறு-உன்
இதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு
நெற்றி முத்தம்
இவைகளுக்காய்
ஏக்கங்களுடன் இதோ உன்
மகள்.

அறிவாயா தாயே
தனிமை கொடுமையென
தாயை இழந்தவள்
அனாதையென

என் வலியினை நீ அறிய
வாய்ப்பில்லை
கண்ணீரை துடைத்துவிட-உன்
கல் நெஞ்சில் ஈரமில்லை.

என் மைதீர்ந்த
எழுதுகோலிடம் கேள்
தனிமையின் ரணங்களை
தவிப்போடு சொல்லும்..

தாயவள் உனக்கான என்
துடிப்பை என்
தலையணையிடம் கேள்
விடியாத என் இரவின் வேதனைகளை
விழி நீரோடு சொல்லும்..!

மகள்கள் ஜாக்கிரதை (சில அப்பாக்களுக்கு)



காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை பார்த்துக்கொள்ளுங்கள்
தங்களை போன்ற தந்தைகள்
இன்னும் உயிருடன்.

தலைகுனிந்த அவர் முன்
தலை நிமிர்ந்து நடந்தேன்.

Wednesday, March 23, 2016

அவன் யாராய் இருக்கக்கூடும்



இதோ
நான் நடந்து செல்லும்
இந்த
ஒற்றையடிப் பாதை
ஏளனம் செய்கிறது
பாதணிகள்
காலில் பாதி தான்
இருக்கின்றதாம்.

வாசனை திரவியங்கள்
அறியாத தேகம்
வியர்வை நாற்றத்தை
கலந்து
நாசினில் நுழைக்கிறதாம்
தென்றலும் தீண்டாமல்
செல்கிறது..

சாலையோர மரங்கள்
சபிக்கத் தொடங்கி விட்டது
இதோ என் நிழலை
அசுத்தபடுத்தவே வருகிறாள்
இவள் என

எஞ்சியுள்ள நாய்களும் முறைக்கின்றன
இன்றும் எச்சில் உணவுகளை
இவளே
எடுத்துக்கொள்வாளென..

ம்ம்ம்

நான் யார் இப்போது
பைத்தியகாரியா.?
அல்லது
பிச்சைக்காரியா..?
இரெண்டுக்கும் இடைப்பட்டவளா.?

என்னை எனக்கே தெரியாத
போது
இவளையும் நேசிக்கிறானாம்
ஒருவன்

சொல்லுங்கள்
அவன் யாராய் இருக்கக் கூடும்...?

Thursday, March 17, 2016

கவிதை கிறுக்கல்



வா
அந்த விண்மீன் 
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..

நீ என்னையும்
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும் 
பொய்கள் உரைக்கலாம்.

உனக்கு பிடித்த 
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த 
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி 
அளிக்கலாம் .

வா வா இதோ இந்த இரவில் 
ஏதேனும் 
கிறுக்கலாம் 
இது போல 
கவிதை எனும் பெயரில்

காதல் தூது



காதல் தூதினை
கனவினில் விடுத்துச் 
சென்றுவிட்டாய்
ம்ம்ம்
உறக்கமே விழிகளை 
தழுவாத போது
பதிலென்ன நான்
உரைப்பேன்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மறுபடி
கனவில்
உன் வரவிற்காய் ....!

பொய்க்கால் குதிரை



கண்ணைகவரும்
ஆடைகளில் கலைஞர்
நாம் வருகின்றோம்
வேஷம் போட்டு உங்கள் முன்
நடன விருந்து
படைக்கின்றோம்...

வழி முழுதும் தோரணங்கள்
எம்
உடல் முழுதும் ரணத்தின்
வலிகள்.

கட்டைமேல் கால்வைத்து
எடுத்து அடி வைக்கையிலே
துடிக்கும் இதயம்
நின்று வரும் இதழ்கள்
மட்டும் புன்னகைக்கும்

அழிகின்ற மறவர் கலை
அழித்திடவே எண்ணம் இல்லை
எந்த செல்வம் இருந்தாலும்
இதன் வழியே
எம் மனம் செல்லும்..

விழாக்களில் எம்மை காண்பீர்
எம்
வேதனை யார் காண்பீர்.?
அரை வயிறு உணவு தான்
ஆனாலும்
துயர் இல்லை.

மரக்காலில் உயிரை வைத்து
மனதெல்லம் மறத்தமிழை வைத்து
எடுத்து சென்றோம் உலகறிய
ஏற்றுக்கொள்வீர்
இக்கலையை.....

Wednesday, March 16, 2016

சங்கீத ஸ்வரங்கள்


சங்கீத ஸ்வரங்கள்

உனக்கும் எனக்குமான
இடைவெளியை
அதிகரிகின்றாயா.?
பணியென
என்னை
தனிமையாக்கி
விலகிச் செல்கிறாயா.?

போதும்
உன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்
சலித்துவிட்டதாம் என் திமிருக்கும்.

மொக்கை போடாதடி என்று
வார்த்தைகளை மெளனமாக்கிவிட்டு
முத்தத்தால் இதழ்களை
மொழி பெயர்ப்பு செய்பவனே

மகிழ்ச்சிகொள்

இவளின் மொக்கையோ
முணுமுணுப்போ
திட்டல்களோ கொஞ்சல்களோ
எதுவும் இல்லை
துயரம் இவள் அற்ற உலகில்
சுதந்திரமாய் சுற்றித்திரி.

ம்ம்ம்
எனக்கென்ன உன் நினைவுகளில்
துடிக்கும் இதயம் அதே
"சங்கித ஸ்வரங்கள் ஏழே
கணக்கா" வோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ..!

Tuesday, March 15, 2016

சா-தீ


உள்ளத்தால் உன்னை
நேசிக்கிறேன்
உயிர் மூச்சாய்
சுவாசிக்கிறேன்
ஒரு முறை உண்மை சொல்
பெண்ணே 
என்னை பிடிக்குமென்று...

என் பதிலுக்கு முன் 
உன் 
சாதியை சொல்லிவிடு

காத்துக்கொள்ள வேண்டும் 
என்
தாலியை..!

சுமையில்லாப் பொழுதுகள்


சுமையில்லாப் பொழுதுகள் சுமையில்லாப் பொழுதுகள்--கயல்விழி

பெற்ற பிள்ளைகள்
பாரினில் உயர்கையில்
தந்தையின் பூரிப்பு
சுமையில்லாப் பொழுதுகள்..

பொக்கிஷமான பெண்பிள்ளை
புகுந்த
வீடு செல்கையில்
அன்னையின் கண்ணீர்
சுமையில்லாப் பொழுதுகள்.

வறண்ட நிலத்தில்
பனித்துளி போல்
மலட்டு வயிற்றினில்
செயற்கை குழந்தை
சுமையில்லாப் பொழுதுகள்

முப்பத்தைந்து கடந்த
முதிர்கன்னி கழுத்தில்
குடியேறும்
மஞ்சளில் மாங்கல்யம்
சுமையில்லாப் பொழுதுகள்

கட்டிய கணவன்
கடலுக்குச் சென்று
உயிருடன் வருவதும்
சுமையில்லாப் பொழுதுகள்.

கர்ணனை போல்
நல்ல நண்பன் கிடைத்தால்
சாதல் வரை எல்லாமே
சுமையில்லாப் பொழுதுகள்.

Tuesday, March 8, 2016

காதல் வந்ததே எனக்குள் காதல் வந்ததே



பிறப்பிற்கும் இறப்பிற்கும் 
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம் 
இரு விழிகளின் வழியே 
அந்த ஒன்று 
இயத்தை திறந்த நொடி .

தரணியை அளக்க நினைத்தவள் 
தன்நிலை மறந்தவள் ஆனேன் 
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள் 
பரிகாசிக்கப்பட்டு போனேன் .

நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள் 
நிலம்பார்த்து நடக்கலானேன் 
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை 
நானே கேட்கலானேன் .

கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார் 
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன் 
கடவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.

இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றேன்.
இலகுவாக்கும் உன்னை என்றார்
ஏளனமாய் நகைத்துச் சென்றேன் .

இன்று 
என்ன ஆனது !
எல்லாமே ஆனது ..
எனக்குள் காதல் உருவாக ..
என் ஆணவம்மெதுவாய் அழிந்திடலானது ...!!!!

Thursday, March 3, 2016

இதயம் பேசுகிறது

நிலா முற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "வெள்ளி முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை


அப்படி எதுவும் தவறு
செய்யவில்லை
அவள்
அனாதையாய்
பிறந்ததைத் தவிர..!

பெற்றவள் குப்பைத் தொட்டியிலிட்ட நொடியில் நினைத்திருக்கவில்லை
பெண்ணாய் பிறந்தது
குற்றமென..!

பிச்சைக்காரியின் பிள்ளையான போது
புரியவில்லை பூவைக்கு
பூப்பெய்தலும்
கொடுமை என்று..!

யாசிக்கும் கரங்களை
நெருடிய விரல்களின்
ஐந்து ரூபாய்
ஆபத்து என்றும் அறிந்திருக்க வில்லை
அபலை..!

இதோ எவனோ
மேய்ந்து முடிந்த அவள் தேகம் ஈக்கள் மொய்க்க தயாராகிக்கொண்டிருக்கின்றது.

அவளின் இதழ்கள் 
இனி பேசபோவதில்லை
இதுவரை 
அவளுக்காக துடித்துக்கொண்டிருந்த
நானே இறுதியாய் பேசிவிட்டேன்...!

இறுதித் துடிப்போடு
"இதயம்"...!!!