Monday, February 22, 2016

வெற்றி நிரப்பு

நிலா முற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "தங்க முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை


புலர்கின்ற பொழுது 
இருள்சூழ்ந்த போதும் 
மூடாதே விழியே 
வெளிச்சத்தை தேடு.

தொலைதூர வானில் 
ஏணியின் படிகள் 
சோர்ந்திடாதே காலே 
தோற்றுப்போவாய் நீயே..

ரணமாக்கும் முட்கள் 
மலராக மாறும் 
துயரென்ன மனமே 
துணிவாய் 
இனி ஜெயமே..

வடிகின்ற விழிநீர் 
கடலாக மாறும்
கரைசேர்த்து உந்தன்
காயங்கள் ஆற்றும்..

விட்டில் பூச்சி நீயல்ல
விளக்கின் மடியில்
சாவதற்க்கு...

பெட்டிப்பாம்பும் நீயல்ல
அடிமைப்பட்டே
வாழ்வதற்க்கு..

முட்டி மோதி எழுந்துவிடு
முறையே 
உலகை ஜெயித்திவிடு..

புகழை விண்வெளியிலும்
பரப்பு...
என்றும் வெற்றியை
மண்ணில் நீ
நிரப்பு.....

நன்றிகளுடன் கயல்.

No comments:

Post a Comment