Sunday, April 3, 2016

ஒருவேளைஅப்படி நடந்திருந்தால்


ஒரு வேளை அப்படி 
நடந்திருந்தால்
என் வீட்டு பெத்திமா
அதன் பாஷையில் கீக் கீ
என்று அழுதிருக்கும்
என் லவ்பேர்ட்ஸ்
ஏதோ ஒரு ராகம்
நிச்சயம் சோகமாய்
இசைத்திருக்கும் .
நான் வளர்த்த
ரோஜா
இன்று
நிச்சயம் மலரொன்றை
பிரசவிக்க தயாராகி இருக்கும்
எனக்காக.
இது வரை 
சிரித்துக்கொண்டிருந்த
என்
மரத்தின் கிளைகள்
ஸ்தம்பித்து போயிருக்கும்
ஆணிவேர்
அறுந்துவிட்டதால்.
மாதம் ஒரு முறையெனும்
ஸ்டெல்லாவை காணும்
முதியோர் இல்லத்து
மேரி பாட்டி
பிராத்தித்துக்கொண்டிருப்பாள்
கர்த்தரே கயலை மீண்டும் தாவென.
ம்ம்ம்
அப்பிடி எதுவும் தான்
நடக்கவில்லையே
இப்போது
ஏமாந்து போன எமன்
என்னை சபித்துகொண்டிருப்பான்
இன்றும் என்னிடம் 
இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாள்
இவள் என்று.!!!!

No comments:

Post a Comment