Monday, April 11, 2016

நிழல்


நீயும் நானும் 
ஒரே ஜாதி தான்
எட்டி உதைத்தாலும் 
விட்டுப்போவதில்லை யாரையும்
கெட்டவரோ நல்லவரோ
எப்போதும்
இணைந்தே இருக்கிறாய்
ஏனோ 
அவர்கள் தான் கண்டுகொள்வதில்லை உன்னை.
என்னைப்போல்
உனக்கும் இருளைக் கண்டால்
பயமோ
மறைந்துவிடுகிறாய் மண்ணோடு.
நிஜமாய் தான் நீ
இருக்கிறாய் 
நிறத்தில் கறுப்பாகி விட்டாயே
அதனால் தான்
பொய்யோடு ஒப்பிட்டும்
விடுகிறார்கள்.
உன்னை பலருக்கு பிடிக்காத
போதும்
என்னைப் போல் சிலருக்கு
பிடித்து விடுகிறது
காரணம் 
எம்மை பிரிவதே இல்லை நீ.

No comments:

Post a Comment