Thursday, April 7, 2016

தாயுமானவன்


தாயாய் சுமக்கும் 
தாரமானவளே
தா 
எனக்கும் தாயாகும் வரம் 
என்கிறான்
ஆணிடம் தாய்மைக்கான 
சாத்தியம் இல்லை 
என்றேன் உறுதியாக
இருக்கிறது
பெண்ணே 
அந்த மூன்று நாட்கள்
அமைதியாகிறேன்
ம்ம்ம்
பெண்மையின் வலி புரியும்
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று 
நாட்கள் இருக்கும்..!!!

1 comment: