மடியில் முகம் புதைத்த
மயக்கத்தில்
ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.
இடை இடையே கரங்கள்
அவள் இடையை வருடிக்கொண்டிருந்தது .
இடம் கிடைக்கும் சமயத்தில்
முத்தம் எனும் பெயரில்
முகத்தை எச்சில் படுத்தினான் .
எட்டிப் போ என்றால் அவள் பின்
சுற்றி சுற்றியே நின்றான்
சூடுதேவை என்பதற்காய் .
ஆசையோ ஆத்திரமோ
இரண்டில் எப்படி அவன் அணைத்தாலும் நகம்பட்டு
ரணமாகும் தேகம் தான் .
யார் இவன் என் இப்படி .?
எங்கிருந்து வந்தானோ நானறியேன்
எனக்குள் எப்படி நுழைந்தானோ நானறியேன் .
மிச்ச உணவை தான் வைத்தேன்
வாலாட்டி வந்துவிட்டான் .
நாய் என்று நான் உரையேன்
அவனெனக்கு தம்பி ஆவான் .
நன்றிகெட்ட மனிதனைவிட
இவன் எனக்கு மேன்மையாவான் .
மயக்கத்தில்
ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.
இடை இடையே கரங்கள்
அவள் இடையை வருடிக்கொண்டிருந்தது .
இடம் கிடைக்கும் சமயத்தில்
முத்தம் எனும் பெயரில்
முகத்தை எச்சில் படுத்தினான் .
எட்டிப் போ என்றால் அவள் பின்
சுற்றி சுற்றியே நின்றான்
சூடுதேவை என்பதற்காய் .
ஆசையோ ஆத்திரமோ
இரண்டில் எப்படி அவன் அணைத்தாலும் நகம்பட்டு
ரணமாகும் தேகம் தான் .
யார் இவன் என் இப்படி .?
எங்கிருந்து வந்தானோ நானறியேன்
எனக்குள் எப்படி நுழைந்தானோ நானறியேன் .
மிச்ச உணவை தான் வைத்தேன்
வாலாட்டி வந்துவிட்டான் .
நாய் என்று நான் உரையேன்
அவனெனக்கு தம்பி ஆவான் .
நன்றிகெட்ட மனிதனைவிட
இவன் எனக்கு மேன்மையாவான் .
No comments:
Post a Comment