Wednesday, June 24, 2015

இவன் என் தம்பியாவான்

இவன் என் தம்பியாவான்
மடியில் முகம் புதைத்த
மயக்கத்தில்
ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.

இடை இடையே கரங்கள்
அவள் இடையை வருடிக்கொண்டிருந்தது .

இடம் கிடைக்கும் சமயத்தில்
முத்தம் எனும் பெயரில்
முகத்தை எச்சில் படுத்தினான் .

எட்டிப் போ என்றால் அவள் பின்
சுற்றி சுற்றியே நின்றான்
சூடுதேவை என்பதற்காய் .

ஆசையோ ஆத்திரமோ
இரண்டில் எப்படி அவன் அணைத்தாலும் நகம்பட்டு
ரணமாகும் தேகம் தான் .

யார் இவன் என் இப்படி .?

எங்கிருந்து வந்தானோ நானறியேன்
எனக்குள் எப்படி நுழைந்தானோ நானறியேன் .
மிச்ச உணவை தான் வைத்தேன்
வாலாட்டி வந்துவிட்டான் .

நாய் என்று நான் உரையேன்
அவனெனக்கு தம்பி ஆவான் .
நன்றிகெட்ட மனிதனைவிட
இவன் எனக்கு மேன்மையாவான் .

No comments:

Post a Comment