Monday, October 19, 2015

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது - கயல்விழி
பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?

பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.

சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?

பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?

எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .

பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும்
எழுதிக்கொண்டே இருக்கின்றோம்
இன்று வரை முடியவில்லை
முடிவும் இல்லை .

கற்பில் பெண் குழந்தை என்றால்
காவல் வேண்டும் கருவறைக்கும்
காத்துக்கொள்
கள்ளிச்செடிகள் காய்கின்றனவாம்
கற்பழிப்புகள் விருட்சம் ஆனதால் .!!

(இது 2015.9.14 அன்று உயிர் குடிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் சேயா எனும் மலரை கசக்கியவனுக்கு எழுதியது .)

No comments:

Post a Comment