Sunday, July 12, 2015

நான் நவநாகரீக பெண்

நான் நவநாகரீக பெண்
பத்து மாதம் சுமப்பதா
இது உனக்கு அடுக்குமா
என் அழகென்ன ஆவது
அது உனக்கு புரியுமா.?

ஐந்து நிமிட சுகத்தினில்
ஆயுள் முழுக்க சிறைபிடிக்க
சிறகுள்ள பறவை தனை
சிறிதேனும் எண்ணாதே .

தாலி எனக்கு தேவை இல்லை .
தாயாகும் எண்ணமில்லை
பூ சூடி பொட்டு வைக்கும் பட்டிக்காடு நான் இல்லை .

கண்களுக்கு விருந்தளிக்க
கையில் கணிணி உண்டு
காலம் கழிக்க அதில் பலதுமுண்டு

மகிழ்ச்சி எனக்கு மதுவில் உண்டு
மஞ்சம் தரும் சுகமும் அதிலுண்டு
அணைத்துக்கொள்ள தினம் ஒரு தோழன் உண்டு
ஆட்டம் போட தோழிகள் உண்டு .

சுகம் தரும் இந்த சுதந்திரம்
துறந்து
தாயாக நினைப்பேனோ உன்
கருவினை சுமந்து
தந்தையாகும் தாகம் உனக்குள்
உண்டென்றால்
தாயாக மாறிடு கர்ப்பத்தை சுமந்து.!!

No comments:

Post a Comment