Friday, July 17, 2015

இனி தீர்ப்பு எங்கள் கையில்

இனி தீர்ப்பு எங்கள் கையில்
ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .

அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .

தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?

பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?

பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .

மன்னித்து விடுங்கள் அன்னையரே
மறுபடி களங்கம்
உம் கருவறைக்கு இல்லை .

இனி
காமத்தோடு பெண்ணை பார்த்தால்
அவன் கண்கள் பறிப்போம் .
கரம்கொண்டு தீண்டினால்
கழுத்தை அறுப்போம் .
கட்டியவளைத் தவிர மற்றவளை
இரத்த உறவென நினைக்க செய்வோம்
ஒருவனுக்கு ஒருத்தியே
உலக நியதிஎன
உரக்கச் சொல்வோம் ...!!
ம்ம்ம் இனி தீர்ப்பு எங்கள்
கையில் .

No comments:

Post a Comment