சில்லென பனித்துளி
என்னை தழுவுகையில்
மெல்லமாய் தோள் சாய்கின்றேன்
புற்களின் மார்பினில் .
செல்லமாய் தென்றல்
உடல் வருடுகையில்
கட்டி அணைக்கின்றேன்
கதிரவன் ஒளிக்கீற்றை .
மணம் வீசும் அரும்புகள்
நாணி விரிகையில்
சத்தமாய் முத்தம்கொடுத்தேன்
மலரவள் இதழ்களில்.
வளைந்தோடும் நதியின்
என்னை தழுவுகையில்
மெல்லமாய் தோள் சாய்கின்றேன்
புற்களின் மார்பினில் .
செல்லமாய் தென்றல்
உடல் வருடுகையில்
கட்டி அணைக்கின்றேன்
கதிரவன் ஒளிக்கீற்றை .
மணம் வீசும் அரும்புகள்
நாணி விரிகையில்
சத்தமாய் முத்தம்கொடுத்தேன்
மலரவள் இதழ்களில்.
வளைந்தோடும் நதியின்
மெல்லிய இசைக்கு
குயிலோடு மெதுவாய்
கானம் படித்தேன்.
கலைந்தோடும் மேகங்கள்
குயிலோடு மெதுவாய்
கானம் படித்தேன்.
கலைந்தோடும் மேகங்கள்
கூடி இணைகையில்
வண்ண மயிலிடம் அபிநயம்
கற்றேன் .
கற்றதும் பெற்றதும் போதவில்லை
ரசித்ததை விட்டுச் செல்ல மனமுமில்லை
அதனால்
கொள்ளை அழகுள்ள அன்னை
இயற்கையில்
மெல்லக் கலந்தேன்
பிள்ளைக் கவியென ...!!!!
வண்ண மயிலிடம் அபிநயம்
கற்றேன் .
கற்றதும் பெற்றதும் போதவில்லை
ரசித்ததை விட்டுச் செல்ல மனமுமில்லை
அதனால்
கொள்ளை அழகுள்ள அன்னை
இயற்கையில்
மெல்லக் கலந்தேன்
பிள்ளைக் கவியென ...!!!!
No comments:
Post a Comment