Tuesday, March 24, 2015

இயற்கை அன்னைக்கு இளைய மகள்


இயற்கை அன்னைக்கு  இளைய  மகள்
சில்லென பனித்துளி
என்னை தழுவுகையில்
மெல்லமாய் தோள் சாய்கின்றேன்
புற்களின் மார்பினில் .

செல்லமாய் தென்றல்
உடல் வருடுகையில்
கட்டி அணைக்கின்றேன்
கதிரவன் ஒளிக்கீற்றை .

மணம் வீசும் அரும்புகள்
நாணி விரிகையில்
சத்தமாய் முத்தம்கொடுத்தேன்
மலரவள் இதழ்களில்.

வளைந்தோடும் நதியின் 
மெல்லிய இசைக்கு
குயிலோடு மெதுவாய்
கானம் படித்தேன்.

கலைந்தோடும் மேகங்கள் 
கூடி இணைகையில்
வண்ண மயிலிடம் அபிநயம்
கற்றேன் .

கற்றதும் பெற்றதும் போதவில்லை
ரசித்ததை விட்டுச் செல்ல மனமுமில்லை

அதனால்

கொள்ளை அழகுள்ள அன்னை
இயற்கையில்
மெல்லக் கலந்தேன்
பிள்ளைக் கவியென ...!!!!

No comments:

Post a Comment