Monday, September 14, 2015

உணர்வுகளில் உருவான காதல்


உணர்வுகளில் உருவான காதல்
இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்

துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்

தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .

நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .

என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .

விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .

வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்

அதிசயம்
உணர்வுகளில் மட்டும் உருவான
காதல்
உயிர் வாழ்கின்றது உலகில் ...!!!

No comments:

Post a Comment