Tuesday, September 15, 2015

ம்ம்ம் இதுவும் உண்மையே


ம்ம்ம் இதுவும் உண்மையே
வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகள்
அறிவதில்லை
விளக்கு தன் உயிர்குடிக்கும் எமன் என்று .

கர்ப்பம் சுமக்கும் சிலந்திக்கு புரிவதில்லை
குழந்தைகள் கண்திறக்கும் போதே
உணவாய் சுவைப்பது
அதன் உடலை என்று.

முளைவிடும் அரும்புகள் நினைப்பதில்லை
மலர்தல் தான்
தன் மரணம் என்று.

மனிதன் உணர்வதே இல்லை
மரணம் தான் வாழ்வின்
முடிவுரை என்று ..!!!

No comments:

Post a Comment