Monday, January 25, 2016

என்னவள் கிறுக்கல்

ரோஜா இதழில் பனித்துளி
என் தேவதை முகத்தில் சிறு பரு .

வேடன் கைபடாத வில்
புருவம்
எனை தாக்கும் விழி
அம்புகள்.

நக்கீரன் ஏற்றுக்கொள்ளும் நறுமணம்
நங்கை அவள் கூந்தல்
மலர்வனம்

கொடிகள் கெஞ்சும்
அவள் இடையழகை
மயில்கள் பழகும்
அவள் நடையழகை.

பொருமையில் அவள் குணம் பூமியை மிஞ்சும்
முறைத்திட்டால்
புயலும் கூட அஞ்சும்.

கறையில்லா வெண்ணிலா
என் வாழ்விற்க்கு
ஒளி தந்த பெண்நிலா

என்பிம்பம் காட்டும்
கண்ணாடி
என்றும் அவளே
என் உயிர் நாடி..!

No comments:

Post a Comment