Thursday, April 16, 2015

சிரிப்பு கலைஞனின் ஜனன தினம்


சிரிப்பு கலைஞனின் ஜனன  தினம்
குறுகிய மீசையும்
குழந்தை மனமும்
குறும்பாய் ஒருவன் இவன்
கோடியில் ஒருவன் ..

இவன் முன் சினத்து நின்றவர்
எவருமில்லை
சிரிக்காமல் சென்றவர் மனிதர்
இல்லை ...

மகிழ்விக்க தெரிந்ததால்
மனிதனானான்
மக்களின் மனதில்
மன்னனான் ..

கள்ளம் இல்லா கலைஞன் என்று
காண்போர் போற்றி மகிழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்த இவன் வாழ்வு
கண்டவர் இல்லை பூமிதனில் .

சிரிக்க மறந்த இவனால் தான்
சிரிக்க கற்றோம் நாம் இங்கே
பிறக்க வேண்டும் மறுமுறையும்
சிறக்க வாழ்க்கை சிரிப்பினிலே ..!!!!


இன்று சிரிப்பு கவிஞனின் ஜனன தினம் .

No comments:

Post a Comment