இரவை பகலாக்கும் மின்
விளக்குகள்
இரத்தத்தை குடிக்கும் இயந்திரங்கள்.
சுவாசத்தையும் ரணமாக்கும் புகை மூட்டங்கள்
வானையும் கிழிக்கும் வாகன
இரைச்சல்கள் .
இவைகளை தாண்டிய ஓர்
பயணம் .
பச்சை பசேலென பறந்து விரிந்த
வயல்வெளிகள்
சில்லெனi வீசும் தென்றல்
சிரிக்கும் நீர் வீழ்ச்சிகள்.
பூத்துக் குலுங்கும் மலர்கள்
புது ராகம் பாடும் பறவைகள் .
இருமருங்கிலும் மரங்கள்
ஈடு இணை இல்லா செல்வங்கள்.
அன்பை பொழியும் மனிதர்கள்
அழகை கொட்டும் இயற்கை
அருகில் உலாவும் விலங்குகள் .
அம்மம்மாம்மா ...
உலக அதிசயங்களின் ஒட்டுமொத்த
உறைவிடம் இதுவல்லவோ ...
காண்பதெல்லாம் கனவா
கண்களுக்கே சந்தேகம்
கால் பதித்தது சொர்கத்திலா .?
கன்னி எனக்குள்ளும் சந்தேகம் ...!!
விளக்குகள்
இரத்தத்தை குடிக்கும் இயந்திரங்கள்.
சுவாசத்தையும் ரணமாக்கும் புகை மூட்டங்கள்
வானையும் கிழிக்கும் வாகன
இரைச்சல்கள் .
இவைகளை தாண்டிய ஓர்
பயணம் .
பச்சை பசேலென பறந்து விரிந்த
வயல்வெளிகள்
சில்லெனi வீசும் தென்றல்
சிரிக்கும் நீர் வீழ்ச்சிகள்.
பூத்துக் குலுங்கும் மலர்கள்
புது ராகம் பாடும் பறவைகள் .
இருமருங்கிலும் மரங்கள்
ஈடு இணை இல்லா செல்வங்கள்.
அன்பை பொழியும் மனிதர்கள்
அழகை கொட்டும் இயற்கை
அருகில் உலாவும் விலங்குகள் .
அம்மம்மாம்மா ...
உலக அதிசயங்களின் ஒட்டுமொத்த
உறைவிடம் இதுவல்லவோ ...
காண்பதெல்லாம் கனவா
கண்களுக்கே சந்தேகம்
கால் பதித்தது சொர்கத்திலா .?
கன்னி எனக்குள்ளும் சந்தேகம் ...!!
No comments:
Post a Comment