Friday, April 17, 2015

வாழ்த்துகளுக்கு ஓர் வாழ்த்துக் கவி

வாழ்த்துகளுக்கு ஓர் வாழ்த்துக் கவி
கற்பனைக்கு உயிர்கொடுத்து
காற்றிலே நடந்தவள் ..
கனவு மட்டும் நிஜமென்று
காரிருளோடு வாழ்ந்தவள் ..

கண்ணீரில் தினம் குளித்து
கவிதைகள் வடித்தவள்
கடவுளான பெற்றோரை
கல்லென சபித்தவள் ..

பிறந்தது கொடுமையென்று
புலம்பி தினம் திரிந்தவள் ..
பூத்ததென்ன இன்று
புத்தம் புது பூ என்று..!!

வான்தொட்ட வாழ்த்துக்களா .?
வையம் போற்றும் ஆசிகளா .?

வாழ்வில் முதல் முறை
வாழ்த்தில் பூரித்தேன்
பிறப்பின் பெருமைதனை
வார்த்தையில் யூகித்தேன் ..

கடந்து சென்ற நள்ளிரவு
கனவில்லை உணர்ந்திட்டேன்
முத்தான ஓர் வாழ்த்தால்
முழு அன்பை புரிந்திட்டேன் ..

ஒன்றென்றால் ஒன்றல்ல ஓராயிரம்
வாழ்த்தின்று
நன்றி என்று முடித்துக்கொள்ள
நாவிற்கும் தயக்கம் இன்று...

உறவென்று உங்களைச் சொல்லி
பிரிந்து செல்ல மனமில்லை ..
உயிராக கலந்திடுங்கள் 
உலகில் நான் வாழும் வரை ....!!!!!!!!!


இன்று..என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ....இக்கவி உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் ..

No comments:

Post a Comment