Tuesday, April 7, 2015

பெண்ணெனும் பேரழகி

பெண்ணெனும் பேரழகி
கொட்டிடும் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்தாள்
கட்டிளம் பெண்ணொருத்தி .
வெட்டிடும் மின்னல்
சட்டென சிரித்தது ..

மெல்லிடை பெண்ணிவள்
மேனி நனைக்காதே
கோபத்தில் குமுறினான்
இடியெனும் அரசன் ...

வெண்பால் கொண்டு
வடித்திட்ட பெண்ணை
வருடாமல் விடுவேனோ
வழிகையில் மழைநீர் விளித்தது ஏக்கத்தில் ..

வல்லினமா இவள் மெல்லினமா
வளைந்தோடும் நதியினமா .?
புலவர்களும் புலம்பிக் கொண்டனர்..

வெண்ணிலா தனிமையில்
கண்ணீர் விட்டது
பெண்ணிலா இவள் வருகையால்
என் முகம் மறந்தனர் கவிஞர் என .!!!!

No comments:

Post a Comment