| பெண் பாவம் பொல்லாதது |
| கட்டியமனைவிக்கு பொட்டெனும் |
| வாங்கிக்குடுக்காத |
| வெட்டிக் கணவன் |
| விபச்சாரி வீட்டு விருந்தோம்பலில் |
| வீராப்பாய் பேசுகின்றான் .. |
| பெண் பாவம் பொல்லாதது .! |
| தர்மம் தலைகாக்கும் |
| தண்டிய பணத்தில் வேட்டிச்சேலை |
| வாங்கிக்கொடுத்து |
| வோட்டுப் பிச்சைக்கேட்கும் அரசியல்வாதி |
| மேடையில் |
| கொடை வள்ளலாய் பேசுகின்றான். |
| தர்மம் தலை காக்கும் .! |
| அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் |
| முதியோர் இல்லத்தில் |
| பெற்றவர்க்கு இடம் பெற்றுக்கொடுத்த பட்டதாரி ஆசிரியர் |
| பாடம் நடத்திக்கொண்டிருந்தார். |
| அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்...! |
| சான் ஏற முழம் சறுக்கும் |
| சாக்கடையில் வேலை செய்பவன் |
| மட்டும் |
| சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தான் |
| பழமொழியை . |
| சான் ஏறி முழம் சறுக்கி . |
எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Wednesday, March 22, 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment