Tuesday, March 21, 2017

வா
அந்த விண்மீன் 
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
நீ என்னையும்
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும் 
பொய்கள் உரைக்கலாம்.
உனக்கு பிடித்த 
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த 
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி 
அளிக்கலாம் .
வா வா இதோ இந்த இரவில் 
ஏதேனும் 
கிறுக்கலாம் 
இது போல 
கவிதை எனும் பெயரில்
💜💜💜💜💜💜💜💜💜💜

No comments:

Post a Comment