| எனக்கான உலகம் |
| வட்டமோ சதுரமோ |
| அது |
| எனக்கே எனக்காய் மட்டும் |
| அங்கு |
| மானிடருக்கு அனுமதி இல்லை . |
| இங்கு போல் |
| அங்கு போலியாய் புன்னகைப்பதில்லை |
| பொய்யான |
| முகங்களும் இல்லை. |
| என் உலகம் |
| விசித்திரமானது |
| முட்கள் மேல் தான் |
| உறங்குகிறேன் |
| ஆனால் |
| அவை என்னை குத்துவதில்லை |
| தீயில் தான் குளிக்கிறேன் |
| அதுவும் என்னை சுடுவதில்லை . |
| சுடுக்காட்டு பிணங்கள் தான் |
| என்னை |
| சூழ்ந்து இருக்கின்றது |
| அதில் |
| துர்வாடை என்பது |
| துளியும் இல்லை . |
| உங்கள் உலகத்திற்கும் |
| என் உலகத்திற்குமான |
| எல்லைக் கோட்டை நிர்ணயித்தவள் |
| நானே அதனால் |
| அறிந்திருக்கிறேன் எதுவரை உங்களுடன் |
| உறவாட வேண்டும் என்பதை ... |
எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Thursday, March 23, 2017
எனக்கான உலகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment