Saturday, March 25, 2017

திமிர்



என் எதிரியை கொலை செய்ய வேண்டும் 
முயற்சித்து 
பல முறை தோன்றுவிட்டேன் .
என்னைவிட்டு விலக 
மறுக்கும் துரோகி 
விட்டுச் சென்றாலும் ஒட்டிக் 
கொள்(ல்)கிறான் . 
எல்லோருக்கும் 
என்னைப் பிடித்த போதிலும் -இவன் இருக்கும்வரை 
என்னை 
வெறுத்தே செல்கின்றனர் .
தொல்லையாய்
இருப்பவன் 
அவனுக்கு துணையாய் இன்னொருத்தி 
இருவரிடமும் 
இது வரை விடுதலை கிடைக்கவில்லை 
எனக்கு .
கொஞ்சம் இருங்கள் 
அறிமுகப் படுத்திவிடுகிறேன் 
அவர்களை
இல்லையெனில் பலி வாங்கக் கூடும் .
இதோ
இவன் தான் என் எதிரி 
பெயரை 
கோவம் என்று வைத்திருக்கிறான் 
அவன் துணைவி இவள்
தான்
பெயரை "திமிர்" என வைத்திருக்கிறாள் 
இப்போது சொல்லுங்கள்
கொலை செய்வது எப்படி ....?

No comments:

Post a Comment